_            முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலோர் தாடியை மிகவும் கேவலமான ஒன்றாக கருதிக் கொண்டு (பெண்களைப் போல்) முகத்தை வைத்து கொள்ள விரும்புகின்றனர். இஸ்லாமியர்கள் இந்த நடைமுறையை கைவிட்டு விட்டதால், நீதி மன்றங்களும் கூட தாடி வைக்கத் தடை விதிப்பதை நாம் காண்கிறோம். ஆண்களுக்கு மட்டுமே அல்லாஹ் வழங்கியுள்ள தாடியைச் சிரைத்து கொள்வது இன்று நாகரீகமாகக் கருதப்படுகின்றது.

 
(What is the punishment) for the Picture-makers
Abu Hurairah (May Allah be pleased with him) narrated that Allah's Messenger (May the
peace and blessing of Allah be upon him) said:

 
மத்ஹபையாவது பின்பற்றுவார்களா?


அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்களே! உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என உங்களுக்குப் போதிக்கிறார்களோ அந்த மத்ஹப் நூல்களில் உள்ள ஏராளாமான விசயங்களை உங்களுக்கு அவர்கள் சுட்டிக் காட்டாமல் மறைத்துள்ளார்கள் என்பதற்குப் பின்வரும் செய்திகள் மிகத் தெளிவான சான்றுகளாகும்.

உங்கள் மத்ஹப் நூற்களிலேயே பித்அத், தடுக்கப்பட வேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத் தான் உங்களோடு சேர்ந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல! மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

 

Praise be to Allah, the Lord of Creations, and Peace and blessings be upon our prophet Muhammad, the faithful and the honest.
 Oh, Allah, we know nothing but what You teach us. You are the All- Knower, the Wise. Oh Allah, teach us what is good for us, and benefit us from what You taught us, and increase our knowledge. Show us the righteous things as righteous and help us to do them, and show us the bad things as bad and help us to keep away from them.
  O Allah our Lord, lead us out from the depths of darkness and illusion, unto the lights of erudition and knowledge, and from the muddy shallows of lusts unto the heavens of Your Vicinity.
Quranic verses and prophetic hadiths about early sleep:

 In fact, Allah’s Book, the Holy Quran, and Prophetic Sunna reiterate the importance of early sleep and early rise. To this effect, Allah, Most Gracious, says,
“And We have made your sleep as a rest.”

[LXXVIII; 9]

 He, All-Mighty, also says,
“Perform the Salat (Prayer) from midday till the darkness of the night, and recite the Quran in the early dawn. Verily, the recitation of the Quran in the early dawn is ever witnessed (attended by the angels).”

[XVII; 78]

 To the same effect, Allah’s Messenger, (PBUH), says,
“O Allah! Bless the earliness of my people!”

[Narrated by At-Tirmithi (1212), Abu Dawood (2606), Ibn Majah (2236) on authority of Sakhr Al-Ghamidi]

 He, (PBUH), also says,
“The two Rak’as of the Dawn Prayer are better than the whole present world and (all) the things therein.”

[Narrated by Muslim (725), At-Tirmithi (416), An-Nasa’i in As-Sunan Al-Kubra (1452) and Ahmad (26330) on authority of ‘A’ishah]

 Abdullah Bin Mas’oud said:
“Allah’s Messenger forbade us from staying awake after the Late-Evening Prayer.”

[Narrated by Ibn Majah (703)]

 However, in his book of Prophetic Hadith Al-Boukhari holds that it is permissible to stay awake after the Late-Evening Prayer only for seeking knowledge, otherwise it is impermissible, as confirmed by Prophetic Sunna and Tradition whereby Muslims are forbidden to gather together after the Late-Evening Prayer except for seeking knowledge. In other words, Allah’s Messenger, (PBUH), bids us to go to bed early and to get up early;

The meaning of the verse and the facts in it:

 Allah, Praised and Exalted, says,
“…and recite the Quran in the early dawn,” i.e. the Quranic Verses that are recited in the Dawn Prayer, Verily, the recitation of the Quran in the early dawn is ever witnessed (attended by the angels).”

First fact:

 Scientists confirm that the highest rate of Ozone in the Earth’s atmosphere is at dawn; and then it gradually decreases until sunrise when it is minimized. This gas, Ozone, has a very useful effect on the human nervous system, and it activates mental and physical work. Hence, those who stay in bed late after sunrise feel exhausted during the rest of the day.

Second fact:

 The rate of ultraviolet rays is higher at sunrise than when the sun has risen to the middle of the sky. Ultraviolet rays are responsible for making Vitamin D, which, in turn, is responsible for precipitation of Calcium in bones. In other words, remaining asleep after sunrise causes fragility and weakness of bones.

Third fact:

 Early rise prevents prolonged sleep. Sleep for eight straight hours minimizes energy of the body and pulse-beat, and it causes blood to run slowly along blood vessels. This causes fatty substances to precipitate on the inner walls of blood vessels, which makes them narrow and sometimes causes angina pectoris. Getting up early to perform the Dawn Prayer prevents prolonged sleep. If necessary, sleep can be divided into two periods: before and after sunrise.

Fourth fact:

 In the human body there is a substance that enhances energy of the whole body, increases metabolism therein, and multiplies the rate of sugar in blood. This substance, called Cortisone, reaches its highest rate at dawn (22 degrees) and then drops down to (7 degrees) after that.
To wrap up, the above-mentioned are some of the facts that verify Allah’s Book, the Holy Quran, and Prophetic Sunna and Tradition. Translation  : Khaled Al-Athmeh
 
தொழுகையின் முக்கியத்துவம்

''மறுமை நாளில் ஓர் அடியான் அவனின் செயல் பற்றி கணக்குக் கேட்கப்படுவதில் முதன்மையானது, தொழுகைதான். அது சீராக இருந்தால் அவர் வெற்றி பெற்று, நல்லவராகிவிட்டார். அது கெட்டு விட்டால், அவர் கவலையும், துயரமும் அடைந்தவராவார். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூஹுரைரா (ரலி), நூல் :திர்மிதீ.

அல்லாஹ்விற்க்கு மிக விருப்பமான செயல் எது? என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்குவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும் என பதிலளித்தார்கள்.அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி) புகாரிஇ முஸ்லிம்.

'நீங்கள் எங்கிருப்பினும் அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான்' (57:4)

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103)

அபூ தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ”எவனிடம் தொழுகை இல்லையோ அவனிடம் ஈமான் இல்லை”

தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. ஆதாரம்: திர்மிதி.

யார் ஒருவர் வேண்டுமென்றே தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவர் அல்லாஹ்விடத்திலே எதையும் அடைய இயலாது (இப்னுமாஜா)


அபூ தர்தா (ரலி)

அவர்கள் கூறினார்கள்: ”எவனிடம் தொழுகை இல்லையோ அவனிடம் ஈமான் இல்லை” தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. ஆதாரம்: திர்மிதி.

யார் ஒருவர் வேண்டுமென்றே தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவர் அல்லாஹ்விடத்திலே எதையும் அடைய இயலாது (இப்னுமாஜா)

நபி (ஸல்) அவர்கூறினார்கள்: ஒரு அடியானிடத்தில் மறுமை நாளில் முதன் முதலாக அவனுடைய அமல்கள் சம்பந்தமாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றித் தான். அது சரியானால் அவன் வெற்றியடைந்து விடுவான். அது தவறினால் அவன் நஷ்டமடைந்து விடுவான். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: திர்மிதீ 378 .

தொழுகையின் அழைப்பை விளையாட்டாக எடுத்துக்கொள்பவர் அறிவில்லாத மக்கள்: -

இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், – அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்; இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம். (அல்குர்ஆன் 5:58)




எனதருமை சகோதர சகோதரிகளே, அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் இந்த அளவிற்கு கடுமையாக எச்சரிக்கப்பட்ட தொழுகையை விடுவதன் விளைவுகளைப் பற்றி நாம் சிந்திக்க கடமைப்பட்டடுள்ளோம். ஷைத்தானின் சோம்பல் என்னும் வலையில் சிக்க விடாமல் அல்லாஹ் என்னையும், உங்களையும் மற்றும் முஸ்லிமான நம் அனைவரையும் பாதுகாத்து தொழுகையை முறைப்படி தொழுவோரின் கூட்டத்தாருடன் சேர்த்துவைத்து நம்மை சுவனபதியில் சேர்த்தருள்வானாகவும்.

from facebook
 
வசூலித்த இடத்தில் தான் ஃபித்ராவை வினியோகிக்க வேண்டுமா? 14th August, 2011 கேள்வி: சவுதி அரேபியா போன்ற நாடுகளில் வேலை நிமித்தம் சென்றுள்ள இந்தியர்கள் தங்களது ஃபித்ராவை வசூல் செய்து தங்களது தாயகத்திற்கு அனுப்பி அங்கேயே வினியோகம் செய்யக் கூடாது, எங்கே வசூல் செய்யப்படுகின்றதோ அங்கேயே வினியோகம் செய்ய வேண்டும் என்று சில மார்க்க அறிஞர்கள் கூறி வருகிறார்கள். இதற்கு உங்களது விளக்கம் என்ன? அஷ்ரப் அலி, ஜுபைல்
 
 பதில்: அபூதாவூதில் இடம் பெற்றுள்ள ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு சில அறிஞர்கள் இவ்வாறு கூறி வருகிறார்கள்.
 
 இவர்கள் குறிப்பிடும் ஹதீஸுக்கும் வேலை நிமித்தம் சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்குச் சென்றுள்ள இந்தியச் சகோதரர்கள் ஃபித்ராவை சேகரித்து தங்களது நாடுகளுக்கு அனுப்புவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
 
 முதலில் அந்த ஹதீஸில் சொல்லப்பட்டிருப்பது என்ன என்பதை பார்ப்போம்.

حدثنا نَصْرُ بن عَلِيٍّ أخبرنا أبي أخبرنا إِبْرَاهِيمُ بن عَطَاءٍ مولى عِمْرَانَ بن حُصَيْنٍ عن أبيه أَنَّ زِيَادًا أو بَعْضَ الْأُمَرَاءِ بَعَثَ عِمْرَانَ بن حُصَيْنٍ على الصَّدَقَةِ فلما رَجَعَ قال لِعِمْرَانَ أَيْنَ الْمَالُ قال وَلِلْمَالِ أَرْسَلْتَنِي أَخَذْنَاهَا من حَيْثُ كنا نَأْخُذُهَا على عَهْدِ رسول اللَّهِ  وَوَضَعْنَاهَا حَيْثُ كنا نَضَعُهَا على عَهْدِ رسول اللَّهِ

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களை ஜியாத் அல்லது கவர்னர் ஒருவர் ஸதகா பொருட்களை வசூலித்து வருமாறு அனுப்புகிறார். அவர் திரும்பி வந்த பொழுது, ‘(வசூலித்த) பொருட்கள் எங்கே?’ என்று இம்ரானிடம் கேட்டார். ‘(வசூலித்து) பொருட்களை கொண்டு வருவதற்காக அனுப்புனீர்களா? நபி (ஸல்) அவர்களின் வாழ்நாளில் எங்கிருந்து பொருட்களை வசூலிப்போமா அங்கிருந்து வசூலித்து, நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எங்கே வினியோகம் செய்வோமோ அங்கே வினியோகித்து விட்டோம்’ என்று கூறினார். (நூல்: அபூதாவூது 1626)
 
 இந்த ஹதீஸில் அஸ்ஸதகா என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஃபித்ராவையும் குறிக்கும் ஜகாத்தையும் குறிக்கும். இமாம் அபூதாவூது அவர்கள் ஜகாத் என்ற கிதாபின் கீழ் இந்த ஹதீஸை பதிவு செய்ததோடு, ஃபித்ரா சம்பந்தப்பட்ட பாடங்களின் வரிசையில் இந்த ஹதீஸை கொண்டு வருகிறார்கள். அதனால் நாம் நமது வசதிக்காக ஃபித்ராவோடு தொடர்புள்ளதாக கொள்வோம்.
 
 வசூலிக்கப்பட்ட இடத்தில் தான் ஃபித்ராவை கொடுக்க வேண்டும் என்று இந்த ஹதீஸில் நேரடியாக சொல்லப்பட வில்லை என்பது முதல் விஷயம்.
 
 வசூலிக்கப்பட்ட இடம் என்றால் என்ன அளவு கோல்?, கிராமத்தில் வசூலித்ததை அந்த கிராமத்திலேயே கொடுக்க வேண்டும் என்பதா? நகரம், பெரிய நகரம், அல்லது நாடு என்று எடுத்துக் கொண்டு அந்தந்த இடங்களில் வினியோகம் செய்வதா?
 
 ‘நபி (ஸல்) அவர்களின் வாழ்நாளில் எங்கிருந்து பொருட்களை வசூலிப்போமா அங்கிருந்து வசூலித்து, நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எங்கே வினியோகம் செய்வோமோ அங்கே வினியோகித்து விட்டோம்’ என்ற வாசகத்தில் வசூலித்த இடமும் வினியோகித்த இடமும் வேறு வேறாக இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை விளங்கலாம்.
 
 வாதத்திற்காக ஃபித்ராவை வசூல் செய்த இடமும் வினியோகித்த இடமும் ஒன்றே என்று வைத்துக் கொண்டாலும், வசூல் செய்த இடத்தில் தான் வினியோகம் செய்ய வேண்டும் என்பதை சட்டமாக ஏற்க முடியாது, ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் ஜகாத் வசூலிப்பவர்களிடம் கிராமப் புறங்களில் வசூலித்து மதீனாவிற்கு கொண்டு வருமாறு சொன்னார்கள். தேவையுள்ள முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் வழங்கினார்கள் என்ற வரலாற்றுச் செய்தியையும் அறிந்து கொள்ள முடிகிறது.
 
 இதிலிருந்து ஃபித்ராவை வசூல் செய்த இடத்திலும் வினியோகிக்கலாம் மற்ற இடங்களிலும் வினியோகிக்கலாம். ஃபித்ராவை வசூல் செய்த இடத்தில் தான் வினியோகம் செய்ய வேண்டும் என்பது தவறான கருத்தாகும்.
 
 ஃபித்ராவை வசூல் செய்த இடத்தில் தான் வினியோகிக்க வேண்டும் என்று மதீனாவையும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் ஒரே இடமாக மனதில் நினைத்துக் கொண்டு முடிவு செய்வதாக இருந்தால், இந்த சட்டம் குறிப்பாக சவுதியில் இருக்கும் அந்த நாட்டுப் பிரஜைகளுக்குத் தான் பொருந்தும். வேலை நிமித்தம் வந்துள்ள இந்திய பிரஜைகளுக்கு அது பொருந்தாது.
 
 பெரும்பாலான இந்தியர்கள் குடும்பத்தினரை பிரிந்து வந்து, சவுதியில் வேலை செய்கிறார்கள். ஒரு குடும்பம் என்றால் தாய், பிள்ளைகள், பெற்றோர்கள் என்று ஃபித்ரா கொடுக்க வேண்டியவர்கள் அதிகமானோர் இந்தியாவில் இருக்கும் போது, சவுதியில் வேலை செய்பவர் தனது ஃபித்ராவை இந்தியாவிற்கு அனுப்புவது தான் ஹதீஸிலிருந்து நாம் புரிந்து கொள்ளும் சட்டமாகும்.
 
 இன்னொரு விஷயத்தையும் மனதில் கொள்ள வேண்டும்.
 
 ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நோக்கங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதையும் கவனிக்க வேண்டும். அந்த நோக்கங்கள் நிறைவேறும் அளவிற்கு ஃபித்ரா வினியோக முறை அமைந்திருக்க வேண்டும்.

بن عَبَّاسٍ قال فَرَضَ رسول اللَّهِ  زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ من اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ من أَدَّاهَا قبل الصَّلَاةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلَاةِ فَهِيَ صَدَقَةٌ من الصَّدَقَاتِ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 
 நோன்பாளிகளிடம் நேர்ந்து விட்ட சிறு தவறுகளுக்காகவும் வீணான பேச்சுக்களுக்காகவும் (நிவர்த்தியாகவும்), ஏழைகள் உண்டு மகிழ வேண்டும் என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் ஜகாத்துல் ஃபித்ரை கடமையாக்கினார்கள். யாரெல்லாம் பெருநாள் தொழுகைக்கு முன்பு கொடுத்து விட்டனரோ அது ஜகாத்துல் ஃபித்ராக ஏற்றுக் கொள்ளப்படும், தொழுகைக்கு பிறகு அவர் கொடுத்தால் அவர் ஸதகா செய்தவராவார். (நூல்: அபூதாவூது 1609, இப்னுமாஜா 1827)
 
 ஒன்று, நோன்பாளிகளிடத்தில் நேர்ந்து விட்ட பாவங்களுக்கு பரிகாரமாக ஃபித்ரா விளங்குகிறது. அதாவது ஃபித்ரா நோன்பாளியை பாவங்களை விட்டும் பரிசுத்தப்படுத்துகிறது.
 
 இரண்டு, ஃபித்ராவின் மூலம் ஏழைகள் உண்டு மகிழ வேண்டும் என்ற செய்தியை நாம் குறிப்பிட்ட ஹதீஸிலிருந்து பெற முடிகிறது. அதாவது ஏழைகள் ஃபித்ராவை பெற்று பெருநாளை கொண்டாட வேண்டும் என்ற விஷயத்தை மற்ற ஹதீஸ்களிலிருந்து பெற முடிகிறது.
 
 நாம் இங்கே முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம், நாம் வழங்கும் ஃபித்ராவின் மூலம் ஏழைகள் பலன் பெற வேண்டுமானால், ஏழைகள் அதிகமாக வாழும் நமது தாய் நாட்டுக்கு ஃபித்ராவை அனுப்புவது கட்டாயமாகும்.
 
 சவுதி அரேபியா போன்ற நாடுகளில் ஃபித்ராவை பெற்று பெருநாள் கொண்டாடக் கூடிய அளவுக்கு, சவுதியிலுள்ள மக்கள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு, மக்களின் நிலை உள்ளது.
 
 அது மாத்திரமின்றி ஃபித்ரா பொருட்களை விற்கிறோம் என்ற பெயரில் ஒரு பெரும் வியாபாரக் கூட்டமும், அதை வாங்கும் ஏழைகள் நாங்கள் என்ற பெயரில் ஃபித்ரா பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு அருகிலேயே இன்னொரு கூட்டமும் அமர்ந்திருப்பதை சவுதி போன்ற இடங்களில் தாராளமாகவே பார்க்க முடியும்.
 
 ஃபித்ரா பொருட்களை வாங்கி அருகில் அமர்ந்திருக்கும் ஃபித்ராவை வாங்குபவர்களிடம் கொடுத்தால் சிறிது நேரத்தில் அந்த ஃபித்ரா பொருட்கள் திரும்பவும் ஃபித்ரா பொருட்களை விற்பனை செய்பவரிடத்திலே வந்து விடுவதை கண்கூடாக பார்க்க முடியும். இங்கே நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஃபித்ராவின் நோக்கம் சிதைக்கப்படுவதை பார்க்க முடியும்.
 
 இதனாலும் நாம் நமது ஃபித்ராவை நமது தாயகத்திற்கு தான் அனுப்ப வேண்டும்.
 
 எல்லாவற்றிற்கும் மேலாக, சவுதியில் வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு உதவ ஏராளமாக அமைப்புக்கள் தாராளமாக உதவிகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஜம்இய்யத்துல் பிர்ரிய்யா, ஜம்இய்யத்துல் ஹைரிய்யா போன்ற அமைப்புகள் ஏழைகளை தேடிச் சென்று ஏசி, ஃபிரிஜ் போன்ற அவர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் இருப்பவர்களுக்கு ஃபித்ரா பொருட்களை கொடுப்பது என்பது பெரிய தமாஸாக போய் விடும்.
 
 ஃபித்ராவை வினியோகம் செய்வதற்கு நமது தாயகம் தான் மிக மிக பொருத்தமானது.

 
ஃபத்வா எண் -1 பஜ்ருத் தொழுகையை அதன் நேரத்தை விட்டுப் பிற்படுத்துதல் 27th November, 2010 ஃபத்வா எண் -1

வழங்கியவர்: முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ்)

தமிழாக்கம்: முபாரக் மதனீ

பஜ்ருத் தொழுகையை அதன் நேரத்தை விட்டுப் பிற்படுத்துதல்

    கேள்வி : நான் தொழுகையில் ஆர்வமுள்ள ஓர் இளைஞன். எனினும், இரவில் தாமதித்து உறங்குவதால் காலை ஏழு மணிக்கே அலாரம் வைத்து எழுகிறேன். எழுந்தவுடன் பஜ்ரைத் தொழுது விட்டு விரிவுரைகளுக்கு செல்வது வழக்கம். வியாழன் வெள்ளி போன்ற நாட்களில் லுஹருக்குச் சற்று முன்பே விழித்தெழுந்து பஜ்ரைத் தொழுகிறேன். இது பற்றிய சட்டம் என்ன?

    ஃபத்வா: பஜ்ருத் தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் தாமதித்துத் தொழும் எண்ணத்தில் வேண்டுமென்றே அலாரத்தைத் தாமதமாக வைப்பது தொழுகையை வேண்டுமென்று மனமுரண்டாக விடுவதாகவே கருதப்படும். தொழுகையை வேண்டுமென்று மனமுரண்டாக விடுபவன், சில அறிஞர்களின் பார்வையில் காபிர் ஆவான். – தொழுகையை வேண்டுமென்று விடாமலிருக்க அல்லாஹ் உதவி செய்வானாக!

    எனினும் யாருக்குத் தூக்கம் மிகைத்து உரிய நேரத்தை விட்டும் தொழுகை தவறிப் போகிறதோ, அவர் மீது குற்றமில்லை. விழித்தெழுந்ததும் அவர் தொழுது விட வேண்டும். அவ்வாறே குறித்த ஒரு தொழுகையை மறந்து விட்டவர் ஞாபகம் வந்ததும் தொழுது விட வேண்டும்.

    அதல்லாமல் வேண்டுமென்றே தொழுகையை அதன் நேரத்தை விட்டும் பிற்படுத்துவது அல்லது தாமதித்துத் தொழ வேண்டும் என்ற நோக்கத்தில் கடிகாரத்தில் நேரம் வைத்துத் தாமதித்து எழுவது இவை அனைத்தும் வேண்டுமென்று தொழுகையை விடுவதாகவே கருதப்படும். இவ்வாறு செய்வது எல்லா அறிஞர்களதும் பார்வையில் மிகப் பெரும் பாவமாகவே கருதப்படுகிறது. என்றாலும் இவன் காபிராகி விடுவானா இல்லையா? என்பதில் உலமாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது.

    பெரும்பாலான அறிஞர்கள் இவன் காபிராக மாட்டான் என்று கருதுகின்ற அதேவேளை, சில அறிஞர்கள் அவன் காபிராகி விடுவான் என்று கூறுகின்றனர். இரண்டாவது சாராரின் கூற்றுக்கு ஒத்ததாகவே ஸஹாபாக்களின் நிலைபாடும அமைந்திருந்தது என்பது இங்கு நோக்கத்தக்கது.

    ‘ஒரு மனிதனுக்கும் ஷிர்க் குப்ருக்கும் இடையிலுள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

    மேலும், ‘நமக்கும் அவர்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடு தொழுகையாகும். யார் தொழுகையை விடுகிறானோ அவன் காபிராவான்’ என்று கூறினார்கள். (நூல்கள் : அஹ்மத், திர்மிதி, நஸயி, இப்னுமாஜா)

 



தொழுகையை வேண்டுமென்றே யாராவது புறக்கணித்தால் அவன் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டும் வெளியேறியவனாகக் கருதப்படுவான்.

ஓர் அடியானுக்கும் நிராகரிப்பிற்கும் இடையில் பிரித்துக் காட்டுவது தொழுகையை விடுவதாகும் என நபி صلى الله عليه وسلم   அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்:முஸ்லிம்

நமக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் இடையில் பிரித்து காட்டுவது தொழுகைதான். எனவே எவன் தொழுகையை விட்டு விடுகிறானோ, அவன் காபிராகி விட்டான் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்:திர்மிதீ, நஸயீ

தொழுகையைத் தவிர வேறு எந்த செயலையும் விடுவது இறை நிராகரிப்பாகும் என நபித்தோழர்களில் யாரும் கருதவில்லை என அப்துல்லாஹ் பின் ஷகீக் அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: திர்மிதீ

தொழுகையை விடுவது நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகும்.
 சுவனவாசிகள் குற்றவாளிகளிடம் கேட்பார்கள் உங்களை ஸகர் என்ற நரகத்தில் நுழையவைத்தது எது? (என்று) அதற்கவர்கள், தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 74:40-43)

இவர்களுக்குப் பின்னர் (வழிகெட்ட) தீய பின் தோன்றல்கள் இவர்களுடைய இடத்தை அடைந்தார்கள், தொழுகையை(த் தொழாது) வீணாக்கினார்கள், மனோ இச்சைகளையும் பின்பற்றினார்கள், ஆகவே அவர்கள் (மறுமையில்) பெரும் தீமையைச் சந்திப்பார்கள். (அல்குர்ஆன் 19:59)

தொழுகையைப் பேணுபவர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்லமுடியும்.
இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகைகளைப் பேணுவார்கள். இத்தகையோர்தாம் (சுவர்க்கத்தை) அனந்தரம் கொள்பவர்கள், இவர்கள் எத்தகையோரென்றால் ஃபிர்தௌஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரமாக கொள்வார்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள். (அல்குர்ஆன் 23:9-11)

தொழுகையை வேண்டுமென்றே விடக்கூடியவன், தொழுவதற்குறிய உடல் ஆரோக்கியம் இருந்தும் தொழாமலிருந்தவன், தொழுகையை தொழுகையாளியை ஏளனமாக கருதியவன், தொழுகையாளியை கிண்டலும் கேலியும் செய்பவன் முஸ்லிம்களின் சகோதரன் அல்ல. இது போன்ற மனிதர்களுடன் குடியிருக்க நேரிட்டால் அவர்களுக்கு தொழுகையை விடுவதினால் ஏற்படும் விளைவுகளை இறை வசனங்களையும் நபிமொழிகளையும் எடுத்துக்கூறி தொடர்ந்து அவர்களுக்கு உபதேசித்து கொண்டே இருக்க வேண்டும்.

அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம். (அல்குர்ஆன் 9:11)

 

 முன்னேறிச் சென்றிட தடை செய்யும் சோம்பல்!
முயற்சியை வீணாய்ச் சிதறடிக்கும் சோம்பல்!…

சோம்பல் மிக்கவர்கள் படுக்கையைவிட்டு மட்டுமல்லாமல், உட்கார்ந்துவிட்டால் இருக்கையை விட்டும் எளிதாக எழுந்திருக்க மாட்டார்கள். சோம்பல் மிக்கவர்கள் தானும் சலித்துக்கொள்வார்கள்; மற்றவர்களையும் சலிப்பூட்டுவார்கள். இவ்வாறு இந்த சோம்பலைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்.

இப்படிப்பட்ட சோம்பலைப்பற்றி, சோம்பேறிகளைப் பற்றி இஸ்லாத்தின் பார்வையில் சுருக்கமாகப் பார்ப்போம். அல்லாஹ் தன் திருமறையிலே பல இடங்களில் நயவஞ்சகர்களைப் பற்றி குறிப்பிடும் போது, இந்த சோம்பலைப்பற்றியும் குறிப்பிடுகின்றான். யார் ஒருவர் தொழுகையில் சோம்பலுடன் தொழுகிறாரோ அவரை அல்லாஹ் ‘நயவஞ்சகர்கள்’ என்று அல்லாஹ் அடையாளம் காட்டுகின்றான்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் – மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை” (அல்-குர்ஆன் 4:142)

எனவே, சோம்பல் என்பது நயவஞ்சகத்தின் அடையாளம் என்பதை உணர்ந்து அதிலிருந்து விடுபடவேண்டும்.

சோம்பலைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்:

1) அதிகாலையில் எழுந்து பஜருடைய தொழுகையை நிறைவேற்றுதல்: -

ஒருவர் சோம்பலில் இருந்து விடுபட்டு, அன்றைய காலைப்பொழுதை சுறுசுறுப்புடன் அடையவேண்டுமா? அதற்கு, நபி (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த வழியை நமக்கு காட்டியிருக்கிறார்கள்.

உண்மையிலேயே பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவென்றால், நம்மில் பலர் இந்த வழியைப் பின்பற்றி நடப்பதில்லை.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘உங்களில் ஒருவர் உறங்கும் போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது; உறங்கு என்று கூறுகின்றான். அவர் அதிகாலையில் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்’ {அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : புகாரி}

பஜ்ர் தொழுகைக்கும் சுறுசுறுப்புக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது. சுறுசுறுப்புடன் அன்றைய தினத்தைத் தொடங்குபவர் பஜ்ர்

தொழுதவராவார். சோம்பல் நிறைந்தவராக அன்றைய தினத்தை அடைந்தவர் ஷைத்தானோடு சேர்ந்து உறங்கி, பஜ்ர் தொழுகையை தொழாதவர் ஆவார். மேற்கண்ட இரண்டு பிரிவினரில் நாம்

எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

2) வயிறு புடைக்க சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்!

இந்த விஷயத்தில் நாம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைக் கடைபிடிக்காததால் சோம்பேறிகளாகக் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். அளவுக்கு மீறி உண்பது நம்மைச் சோம்பேறிகளாக்குகின்றது. ஒருவரைப் பார்த்து, ஏன் சோம்பலாக இருக்கிறாய் என்று கேட்கும் போது அவர், ‘உண்ட மயக்கம்; அது தான் காரணம்’ என்று கூறுவதை இன்று நாம் சர்வ சாதாரணமாக காண்கிறோம். நபி (ஸல்) அவர்கள், அரை வயிறு சாப்பிட்டு, கால் வயிறு தண்ணீர் குடித்து, கால் வயிறை காலியாக வைப்பார்கள். நாமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றினால் சோம்பலில் இருந்து தவிர்ந்துக் கொள்ளலாம்.

3) இரவில் தாமதமாக படுக்கைக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்!

நம்மில் பலர் இரவில் தாமதமாக உறங்கி காலையில் மிகவும் தாமதமாக எழுந்திருக்கக் கூடியவர்களாக இருக்கிறோம். இதுவும் நபி (ஸல்) அவர்களின் வழக்கத்திற்கு மாறான செயலாகும். நபி (ஸல்) அவர்கள் இரவில் முன்னேரத்தில் உறங்கி, தஹஜ்ஜத் தொழுகைக்காக சீக்கிரம் எழுந்திருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆகையால் நாம் சீக்கிரமாக உறங்கி, அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை மேற்கொண்டால் சோம்பலில் இருந்து தவிர்ந்துக் கொள்ளலாம்.

4) சோம்பலை விட்டும் நம்மை பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்தல்!

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில், சோம்பலை விட்டும் பாதுகாவல் தேடுபவர்களாக இருந்தார்கள்.

‘யா அல்லாஹ்! கவலை, துயரம், இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், மனிதனின் ஆதிக்கம் மற்றும் கடனின் சுமை ஆகியவற்றைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்’ என்ற துஆவை தொழுகையில் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்.
(ஆதாரம் : புகாரி)

ஆகையால், ஈருலக வெற்றிக் கனியை நம்மிடமிருந்து பறித்துவிடுகின்ற அளவிற்கு மோசமான இந்த சோம்பலை நாம் மேற்கண்ட நபிவழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் விரட்டுவதற்கு முயற்சி செய்ய செய்ய வேண்டும். ‘நாளையிலிருந்து நமது முயற்சியைத் துவங்கலாம்’ என்று சோம்பலின் காரணமாகத் தள்ளிபோடாமல் அதை இப்பொழுதிலிருந்தே கடைப்பிடிக்க வேண்டும்.

‘சோர்வு’ என்பதிலுள்ள முதல் எழுத்தை மாற்றினாலேயே நமக்கு பிறந்து விடும் ‘தீர்வு’.

சோம்பல்மிக்கவர்கள் வாழ்க்கையில் இழப்பது எத்தனையோ! சுறுசுறுப்பானவர்கள் பெறுவது எவ்வளவோ! எனவே சோம்பலை விரட்டி நாமும் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாகவும்.

 தொகுப்பு
Cuddalore MuslimFriends

 
நபி(ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் ஜமாத்து அன்றி 20 ரகஅத்துகளும், வித்ரும் தொழுதார்கள் (இப்னு அப்பாஸ்(ரழி) பைககீ)

    இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள ‘இப்றாஹீம்பின் உஸ்மான்’ என்பவர் மிகவும் பலகீனமானவர். இவர் பற்றி இவர் பொய்யர் என்று ஷஃபா அவர்களும், நம்பகமற்றவர் என்று அஹ்மத், இப்னு முயீன், புகாரி, நஸயீ, அபூதாவூத், அபூஹாத்தம், தாரகுத்னீ ஆகியோரும், ஹதீஸ்கலையினரால் புறக்கணிக்கப்பட்டவர் என்று திர்மிதி, அபூதாலிம் ஆகியோர் விமர்சித்துள்ளார்கள்.

    உமர்(ரழி) அவர்கள் காலத்தில் ரமழானில் மக்கள் 23 ரகஅத்துக்கள் தொழுது கொண்டிருந்தார்கள். (யஜீது பின் ரூமான், பைஹகீ)

    இதன் முதல் அறிவிப்பாளரான ‘யஜீதுபின் ரூமான்’ என்பவர் உமர்(ரழி)அவர்களின் காலத்தவர் அல்லர் என்று இமாம் பைஹகீ அவர்களே விமர்சித்துள்ளார்கள். இவ்வாறு ஒருவர் காலத்தில் வாழ்ந்திராத ஒருவர் அக்காலத்தவரின் நடைமுறைப் பற்றி எடுத்துக்கூறுவதை எவ்வாறு ஏற்க முடியும்? ஆகவே இந்த அடிப்படையில் இவ்வறிவிப்பு கோளாறுடையதாயிருப்பதால் ஏற்புக்குறியதல்ல.

    அலி(ரழி) அவர்கள் மக்களுக்கு 20 ரகஅத்துக்கள் தொழவைக்கும்படி ஒருவருக்கு கட்டளையிட்டார்கள். (அபுல்ஹஸனாஃ. நூல்: பைஹகீ, இப்னு மாஜ்ஜா)

    இதன் அறிவிப்பாளராகிய ‘அபுல்ஹஸனாஃ’ என்பவர் ஹதீஸ் கலைக்கு அறிமுகமற்றவர் என்று இப்னு ஹஜர் அவர்கள் தமது ‘தக்ரிபு’ எனும் நூலில் விமர்சித்துள்ளார்கள். ஆகவே இது ஏற்புக்குறியதல்ல

    ஒருமுறை அலி(ரழி) அவர்கள் ரமழானில், குர்ஆனை நன்கு ஓதும் நபர்களை அழைத்து மக்களுக்கு 20 ரகஅத்துகள் தொழ வைக்கும்படி கட்டளையிட்டிருப்பதோடு அலி(ரழி) அவர்கள் தாமே அந்த மக்களுக்கு வித்ரும் தொழவைத்துக் கொண்டிருந்தார்கள். (அபூஅப்துர்ரஹானிஸ்ஸில்மீ, பைஹகீ)

    இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘ஹம்மாதுபின்ஸ்ஸ்ஷுஐபு’ என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரை இப்னு முயீன், நஸயீ ஆகியோர் பலஹீனமானவர் என்கிறார்கள். இமாம் புகாரி அவர்கள் இவர் பிரச்னைக்குரியவர் என்றும், இப்னு அதீ அவர்கள் இவருடைய பெரும்பாலான அறிவிப்புகள் ஏற்புக்குரியவை அல்லவென்றும் விமர்சித்துள்ளார்கள். ஆகவே, இது முறையான அறிவிப்பல்ல.

    உமர்(ரழி) அவர்கள் மக்களுக்கு 20 ரகஅத்துகள் தொழவைக்கும்படி கட்டளையிட்டார்கள். (யஹ்யப்னுஸயீத் இப்னு அபீஷைபா)

    இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெற்றுள்ள ‘யாஹ்யா பின் ஸயீத்’ என்பவர் உமர்(ரழி) அவர்கள் காலத்தில் உள்ளவரல்லர். ஆகவே இதன் அறிவிப்பாளர் தொடரில் முறிவு காணப்படுவதால் இதுவும் ஏற்புக்குரிய தகுதியை இழந்து விடுகிறது.

    உபையுபின் கஃபு(ரழி) அவர்கள் மதீனாவில், ரமழான் மாதத்தில் மக்களுக்கு 20 ரகஅத்துக்கள் தொழவைத்து விட்டு 3 ரகஅத்துகள் வித்ரும் தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். (அப்துல் அஜீஸ்பின்ரஃபீஉ, இப்னுஷைபா)

    இதன் அறிவிப்பாளராகிய ‘அப்துல் அஜீஸ்பின்ராஃபீஉ’ என்பவர் உபையுபின் காலத்தில் உள்ளவர் அல்லர். ஆகவே இவ்வறிவிப்புத் தொடரில் முறிவு ஏற்பட்டு ஏற்புத்தன்மையை இழந்திருப்பதோடு, உபையுபின்கஃபு(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில் தாம் தமது குடும்பத்தாருக்கு 8 ரகஅத்துகளும் வித்ரும் தொழவைத்ததாக எடுத்துக்கூறப்பட்ட அறிவிப்பும், உமர்(ரழி) அவர்கள்  உபையுபின் கஃபு(ரழி) தமீமுத்தாரீ(ரழி) ஆகியோருக்கு 11 ரகஅத்துகள் தொழவைக்கும்படி கட்டளையிட்ட அறிவிப்பும் மிக பலம் வாய்ந்தவையாயிருக்கும் போது அவற்றுக்கு முரண்பட்டதாகவும் இருக்கின்றது.

    இப்னுமஸ்வூத்(ரழி) அவர்கள் 20 ரகஅத்துகள் தொழுதுவிட்டு, 3 ரகஅத்துகள் வித்ரு தொழுவார்கள்.(அஃமஸ், கிதாபு கியாமுல்லைல்)

    இதன் அறிவிப்பாளராகிய ‘அஃமஸ்’ என்பவர் இப்னுமஸ்வூத்(ரழி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பிழந்தவராவார். ஆகவே இதுவும் ஏற்புக்குரியதல்ல.

    நாங்கள் உமர்(ரழி) அவர்கள் காலத்தில் 20 ரகஅத்துக்களும், வித்ரும் தொழுதோம். (ஸாயிபுபின்யஜீத், பைஹகீ)

    இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள ‘அபூ உஸ்மான்’ அப்தில்லாஹ்’ என்பவர் ஹதீஸ் கலைக்கு அறிமுகமற்றவராக இருக்கிறார். மேலும் இதே ‘ஸாயிப்னுயஜீத்’ என்பவர் “நாங்கள் உமர்(ரழி) அவர்களின் காலத்தில் 11 ரகஅத்துகள் தொழுது கொண்டிருந்தோம்”  என்று அறிவித்துள்ள ஓர் அறிவிப்பு ‘சுனனு ஸயீதிப்னிம்ஃன்ஸூர்’ எனும் நூலில் காணப்படுகிறது. இவ்வறிவிப்பு மிகவும் பலம் வாய்ந்த ஸஹீஹான அறிவிப்பாக உள்ளது என்று ‘அல்மஸாபீஹ் ஃபிஸலாத்திந்தராவீஹ்’ எனும் நூலில் இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

    இவ்வாறே ‘உமர்(ரழி) அவர்கள் காலத்தில் மக்கள் ரமழான் மாதத்தில் 20 ரகஅத்துகள் தொழுது கொண்டிருந்தார்கள்’ என்ற ஓர் அறிவிப்பும் பைஹகீயில் காணப்படுகிறது. இதன் அறிவிப்பாளரான ‘அபூஅப்தில்லாஹ்பின் ஃபன்ஜவைஹித்தைனூரி’ என்பவர் ஹதீஸ் கலைக்கு அறிமுக இல்லாதவராயுள்ளார். ஆகவே இதுவும் ஏற்புக்குரியதல்ல.

    மேற்கண்டவாறு 20 ரகஅத்துக்கள் என்ற வகையில் ஆதாரமற்ற பல அறிவிப்புகள் பல காணப்பட்டாலும், அவை அனைத்தும் அதர்கள் – சஹாபாக்களின் சொற் செயல்கள்தான். நமக்கு 8+3 பதினொரு ரகஅத்துகள் என்பதற்கு நபி(ஸல்) ஆவர்களின் சொல்லும், செயலும், அங்கீகாரமும் அசைக்க முடியாத ஸஹீஹான ஆதாரங்களாக இருப்பதால் ரமழானுடைய இரவுத் தொழுகை 8+3 பதினொரு ரகஅத்துகள்தான் என்பதை மிகத் தெளிவாக அறிகிறோம்.

    எனவே ரமழான் இரவின் முற்பகுதியில் 8+3 தொழுவது நபிவழியாகும். இரவின் பிற்பகுதியில் தொழுவதும் நபிவழியாக இருப்பதோடு மிகவும் சிறப்புக்குரியதாகவும் இருக்கிறது. அதிகப்படுத்தி ஜமாஅத்தாக தொழுவது நிச்சயமாக நபிவழியே அல்ல. ஜமாஅத்தாக அல்லாமலும் குறிப்பிட்ட எண்ணிக்கையை நிர்ணயம் செய்யாமலும் விரும்புகிறவர்கள் விரும்பிய எண்ணிக்கையில் எவ்வித நிர்ப்பந்தமோ, சடைவோ இல்லாமல் தனியாக உபரி வணக்கமாக (நஃபிலாக) தொழுவதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை.